Tuesday, August 14, 2012

Mahakavi Bharathi songs created patriotism in the mind of Indians.

Mahakavi Bharathi songs created patriotism in the mind of Indians.

மகா கவி பாரதியின் பாடல்கள் இந்திய மக்கள் உள்ளங்களிலே விடுதலை உணர்வைத் தூண்டியது.

இந்திய சுதந்திரத்தை நாம் அடைவதற்கு முன்பாகவே “ஆடுவோமே பள்ளிப்பாடுவோமே,ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று” என்று ஓங்காரக்குரல் கொடுத்து இந்திய விடுதலை போராட்ட வீரர்கள் மீது இருந்த நம்பிக்கையில் கவிதை முழக்கம் செய்தார் ம்கா கவி பாரதியார்.

தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இந்த பாட்டு எதிரொலித்தது.இவரது கவிதைகள் தேசப்பற்றை வளர்க்கும் அளவுக்கு தீவிரமாக இருந்ததைக்கண்டு வெள்ளையர்கள் நடுநடுங்கினார்கள். அவரை கைது செய்ய எண்ணினார்கள். தாயின் மணிக்கொடி பாரீர்,அதைத்தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர் என்று பாடி இந்திய மக்கள் அனைவரையும் வந்தே மாதரம், வெள்ளையனே வெளியேறு என்ற புரட்சி கோஷம் எழுப்ப வைத்தார் மகா கவி பாரதி.

இந்திய சுதந்திர நன்னாளில் மகாகவி போன்ற தேசத்தியாகிகளை நெஞ்சில் நினைத்து வணங்கி அஞ்சலி செலுத்துவோம்.

ஜெய் ஹிந்த்...! வந்தே மாதரம்...!!

No comments:

Post a Comment